என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ராணுவ தாக்குதலில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் பலி
Byமாலை மலர்20 Feb 2017 12:34 AM GMT (Updated: 20 Feb 2017 12:34 AM GMT)
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் இந்த ஆண்டில் கடந்த 50 நாட்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இந்த ஆண்டில் (2017) கடந்த 50 நாட்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த தாக்குதல்களில் இந்த நாட்களில் தான் அதிக அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 26 வீரர்கள் இதுவரை இறந்து உள்ளனர். இதில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி அதிகாரி உள்பட 20 வீரர்கள் உயிரிழந்ததும் அடங்கும்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்ஹான் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இந்த ஆண்டில் (2017) கடந்த 50 நாட்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த தாக்குதல்களில் இந்த நாட்களில் தான் அதிக அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 26 வீரர்கள் இதுவரை இறந்து உள்ளனர். இதில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி அதிகாரி உள்பட 20 வீரர்கள் உயிரிழந்ததும் அடங்கும்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்ஹான் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X