என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக அரசியல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: கிரண் ரிஜிஜு
Byமாலை மலர்13 Feb 2017 10:43 AM GMT (Updated: 13 Feb 2017 10:43 AM GMT)
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மத்திய அரசு தலையிடாது என்றும், அது மாநிலத்தின் உள்விவகாரம் என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
புதுடெல்லி:
தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய சசிகலா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறியிருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக உள்ளார். இதனால் ஆளுநர் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு புதுடெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசும்போது தமிழக விவகாரம் குறித்து கூறியதாவது:-
தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரமானது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில் மத்திய அரசு தலையிடும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பின் அடிப்படையில் தலையிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இது அரசியல் விவகாரம் மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகும். மத்திய அரசு தலையிட முடியாது.
இது மாநில விவகாரங்களின் கீழ் வருகிறது. இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்? அதற்கு எந்த காரணமும் இல்லை. இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் உள்ள குழுவினரிடையே நிலவும் பிரச்சனை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய சசிகலா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறியிருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக உள்ளார். இதனால் ஆளுநர் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு புதுடெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசும்போது தமிழக விவகாரம் குறித்து கூறியதாவது:-
தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரமானது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில் மத்திய அரசு தலையிடும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பின் அடிப்படையில் தலையிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இது அரசியல் விவகாரம் மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகும். மத்திய அரசு தலையிட முடியாது.
இது மாநில விவகாரங்களின் கீழ் வருகிறது. இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்? அதற்கு எந்த காரணமும் இல்லை. இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் உள்ள குழுவினரிடையே நிலவும் பிரச்சனை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X