என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட்: போட்டியிட சீட் கிடைக்காததால் ஆத்திரம், காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டது
Byமாலை மலர்22 Jan 2017 11:55 AM GMT (Updated: 22 Jan 2017 11:55 AM GMT)
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் கொடுக்காததால் காங்கிரஸ் அலுவலகம் மீது தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
டோராடூன்:
உத்தரக்காண்ட் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டது.
அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நவீன் பிஷ்த் மற்றும் ஆர்யேந்திர ஷர்மா ஆகியோரது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்கவில்லை. இதனால், வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே சீட் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், சிலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மேலிடமும் அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X