என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 2 பேர் கைது
Byமாலை மலர்21 Jan 2017 10:05 AM GMT (Updated: 21 Jan 2017 10:05 AM GMT)
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
திருமலை:
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரகிரி மண்டலம், முக்கோட்டி பகுதி அருகே 30க்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களுடன் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த கடியன் ரவி, ஆண்டிகோவிந்தன் என்பதும், கடந்த 5 நாட்களாக சேஷாசலம் வனப்பகுதியில் தங்கியுள்ளதும் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் அனைவரும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முயன்றதும் தெரிந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 60 மரங்களை வெட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்வதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரகிரி மண்டலம், முக்கோட்டி பகுதி அருகே 30க்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களுடன் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த கடியன் ரவி, ஆண்டிகோவிந்தன் என்பதும், கடந்த 5 நாட்களாக சேஷாசலம் வனப்பகுதியில் தங்கியுள்ளதும் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் அனைவரும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முயன்றதும் தெரிந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 60 மரங்களை வெட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்வதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X