search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நானும் தமிழன் தான்: பெருமிதத்தோடு மார்தட்டும் மார்க்கண்டேய கட்ஜூ
    X

    'நானும் தமிழன் தான்': பெருமிதத்தோடு மார்தட்டும் மார்க்கண்டேய கட்ஜூ

    தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சட்ட ரீதியாக தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ 'நானும் தமிழன்' என்று பெருமிதத்தோடு கருத்து பதிவு செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் தமிழகத்தில் துவங்கி, இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்களிடம் நிலவி வரும் சட்ட ரீதியான சந்தேகங்களுக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பதில் அளித்து வருகிறார். 

    ஜல்லிக்கட்டு மட்டுமில்லாமல் தமிழர்களின் விவகாரத்திலும், பாரம்பரிய உரிமைகள் தொடர்பாகவும் கட்ஜூ காட்டி வரும் அக்கறைக்கு சமூக வலைத்தளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நானும் ஒரு தமிழன் தான் என மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்திருப்பதாவது..



    மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை கிடையாது.  ஒருவேளை மறுபிறவி இருப்பது உண்மையெனில், எனது முந்தைய பிறவியில் நான் நிச்சயம் தமிழனாக இருந்திருப்பேன். 

    நான் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு செல்லும் போதும், என் வீட்டிற்கு செல்வதை போன்றே உணர்கிறேன். தமிழகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். 

    அன்பை தாராளமாக செலுத்தும் பண்புடைய தமிழர்கள் என் மீது மதிப்பும், அக்கறையும் செலுத்தியுள்ளனர், இதனாலேயே ஒவ்வொரு முறை தமிழரை சந்திக்கும் போதும் நானும் ஒரு தமிழர் என தெரிவிப்பேன். 

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்று கொண்டது எனக்கு சில வழக்குகளில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் சில முறை தமிழ் தெரிந்த வழக்கறிஞர்களிடம் 'உட்காருங்க' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். சில சமயங்களில் 'தள்ளுபடி' என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×