search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் கண்காணிக்கப்படும்: மனோகர் பாரிக்கர்
    X

    ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் கண்காணிக்கப்படும்: மனோகர் பாரிக்கர்

    ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் கண்காணிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
    காந்திநகர்:

    எல்லைப் பாதுகாப்பு படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேத் பதூர் யாதவ் சமீபத்தில் குற்றம்சாட்டினார். மேலும், தனக்கு வழங்கப்படும் மூன்று வேளைக்கான உணவுகளையும் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ‘எழுச்சி மிகு குஜராத்’ உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்ட பாரிக்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "எல்லைப் பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் அதுகுறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    ஆனால், கடந்த 2 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை நான் கண்காணித்து வருகிறேன். தற்போது உறைந்த சிக்கன் இறைச்சியை ராணுவத்தின் 26 யூனிட்களுக்கு அனுப்பி வருகிறோம். அடுத்த 2 வருடங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் (FSSAI) அனுமதி அளிக்கும் சிக்கன் ராணுவத்தின், ஒவ்வொரு யூனிட்டுக்கும் வழங்கப்படும். இதனால் உணவின் தரம் தானாக முன்னேறி விடும்" என்றார்.

    தேத் பதூர் யாதவ்வின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திடுமாறு பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×