என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண்ணை எரித்துக்கொன்ற கொடுமை
Byமாலை மலர்9 Dec 2016 2:37 PM GMT (Updated: 9 Dec 2016 2:37 PM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் வயதான பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற கொடுமை நடந்துள்ளது.
குந்தி(ஜார்க்கண்ட்):
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் அனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா சாய் என்ற பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி சூனியம் வைத்ததால் குழந்தைகள் இறந்துவிட்டதாக நினைத்து, அவரை அனிதா சாய் உயிரோடு எரித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஷ்வினி குமார் சின்கா கூறியதாவது:-
அனிதா சாய்க்கு கடந்த நவம்பர் 15-ம்தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் ஒரு குழந்தை டிசம்பர் 3-ம்தேதி இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுசாரி பூரு (62) என்ற பெண்ணிடம் சென்று தனது குழந்தையை குணப்படுத்தும்படி கேட்டுள்ளார். அவர் குழந்தை குணமாக வேண்டி பூஜை செய்ததாக தெரிகிறது. ஆனால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் நேற்று இறந்துவிட்டது.
ஆனால், சுசாரி சூனியம் வைத்ததால் தனது குழந்தைகள் இறந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அனிதா, நேற்று சுசாரி மீது மண் எண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அனிதா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை குணப்படுத்துவதாக கூறி கடுமையாக தாக்கி காயப்படுத்திய பில்லி சூனிய மருத்துவர் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் அனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா சாய் என்ற பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி சூனியம் வைத்ததால் குழந்தைகள் இறந்துவிட்டதாக நினைத்து, அவரை அனிதா சாய் உயிரோடு எரித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஷ்வினி குமார் சின்கா கூறியதாவது:-
அனிதா சாய்க்கு கடந்த நவம்பர் 15-ம்தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் ஒரு குழந்தை டிசம்பர் 3-ம்தேதி இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுசாரி பூரு (62) என்ற பெண்ணிடம் சென்று தனது குழந்தையை குணப்படுத்தும்படி கேட்டுள்ளார். அவர் குழந்தை குணமாக வேண்டி பூஜை செய்ததாக தெரிகிறது. ஆனால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் நேற்று இறந்துவிட்டது.
ஆனால், சுசாரி சூனியம் வைத்ததால் தனது குழந்தைகள் இறந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அனிதா, நேற்று சுசாரி மீது மண் எண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அனிதா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை குணப்படுத்துவதாக கூறி கடுமையாக தாக்கி காயப்படுத்திய பில்லி சூனிய மருத்துவர் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X