search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
    X

    குஜராத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

    குஜராத் போலீசார் இன்று சூரத்தில் ரூ.76 லட்சத்துடன் 4 பேரை கைது செய்தனர். அவை அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.
    அகமதாபாத்,

    கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதால் நாடு முழுவதும் வரிமான வரித்துறையினர் மற்றும் போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மராட்டிய மாநிலம் பதிவு எண் கொண்ட ஹோண்டா கார் ஒன்று சூரத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியின் கிளாசிக் காம்ப்ளக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணத்தை எடுத்துச் செல்வதற்கான சரியான தகவலை தெரிவிக்காததால் பறிமுதல் செய்தனர். 38 பண்டல்களில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தது.

    இதுதொடர்பான காரில் வந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பெண். இந்த நான்கு பேரையும் வரிமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது.

    கைது செய்யப்பட்டவர்கள் கிரிஷ் படேல் (வால்சாத், குஜராத்), ராஜ்குமார் சிங் (நாசிக்), அருண் கிரிஷ்நாத் (நாசிக்) மற்றும் தீப்தி படேல் (குஜராத் மாநிலம் நாவ்சாரியை சேர்ந்தவர்) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் தீப்தி படேல் ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×