என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்9 Dec 2016 1:51 PM GMT (Updated: 9 Dec 2016 1:51 PM GMT)
குஜராத் போலீசார் இன்று சூரத்தில் ரூ.76 லட்சத்துடன் 4 பேரை கைது செய்தனர். அவை அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.
அகமதாபாத்,
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதால் நாடு முழுவதும் வரிமான வரித்துறையினர் மற்றும் போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் பதிவு எண் கொண்ட ஹோண்டா கார் ஒன்று சூரத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியின் கிளாசிக் காம்ப்ளக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணத்தை எடுத்துச் செல்வதற்கான சரியான தகவலை தெரிவிக்காததால் பறிமுதல் செய்தனர். 38 பண்டல்களில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தது.
இதுதொடர்பான காரில் வந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பெண். இந்த நான்கு பேரையும் வரிமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிஷ் படேல் (வால்சாத், குஜராத்), ராஜ்குமார் சிங் (நாசிக்), அருண் கிரிஷ்நாத் (நாசிக்) மற்றும் தீப்தி படேல் (குஜராத் மாநிலம் நாவ்சாரியை சேர்ந்தவர்) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் தீப்தி படேல் ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதால் நாடு முழுவதும் வரிமான வரித்துறையினர் மற்றும் போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் பதிவு எண் கொண்ட ஹோண்டா கார் ஒன்று சூரத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியின் கிளாசிக் காம்ப்ளக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணத்தை எடுத்துச் செல்வதற்கான சரியான தகவலை தெரிவிக்காததால் பறிமுதல் செய்தனர். 38 பண்டல்களில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தது.
இதுதொடர்பான காரில் வந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பெண். இந்த நான்கு பேரையும் வரிமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிஷ் படேல் (வால்சாத், குஜராத்), ராஜ்குமார் சிங் (நாசிக்), அருண் கிரிஷ்நாத் (நாசிக்) மற்றும் தீப்தி படேல் (குஜராத் மாநிலம் நாவ்சாரியை சேர்ந்தவர்) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் தீப்தி படேல் ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X