என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூபாய் நோட்டு செல்லாது முடிவு முட்டாள்தனமானது: மோடி மீது ராகுல் பாய்ச்சல்
Byமாலை மலர்8 Dec 2016 7:47 AM GMT (Updated: 8 Dec 2016 7:47 AM GMT)
500, 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி முடிவு முட்டாள்தனம். இதனால் நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்துக்கு முன்பு ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தைரியமானது என்று பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவு முட்டாள்தனம். இதனால் நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏழைகள், விவசாயிகள், தினக்கூலிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிரதமர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை அறிவித்துள்ளார். விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது பிரதமர் வேடிக்கை விளையாட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
பிரதமர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும். நாங்கள் அவரை ஓடவிடமாட்டோம்.
பாராளுமன்றம் செயல்படாமல் போவதற்கு மத்திய அரசுதான் காரணம். எதிர்க்கட்சிகள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்துக்கு முன்பு ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தைரியமானது என்று பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவு முட்டாள்தனம். இதனால் நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏழைகள், விவசாயிகள், தினக்கூலிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிரதமர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை அறிவித்துள்ளார். விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது பிரதமர் வேடிக்கை விளையாட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
பிரதமர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும். நாங்கள் அவரை ஓடவிடமாட்டோம்.
பாராளுமன்றம் செயல்படாமல் போவதற்கு மத்திய அரசுதான் காரணம். எதிர்க்கட்சிகள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X