search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
    X

    புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளுடனேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    மும்பை:

    புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல் புதிய 100 ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

    அதே போல் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். 2016 என்ற எண் வரிசையில் பழைய நோட்டுகளில் இருக்கும் எண்களின் அளவையே ஒத்து இருக்கும்.

    அதே நேரத்தில் புதிய நோட்டுகளில் அச்சிடப்பட்டு இருக்கும் மற்ற எண்களும், அடையாள குறியீடுகளும் சற்று பெரிய அளவில் இருக்கும்.

    இந்த நோட்டுகளில் வரிசைகள் கோடுகள் ஏதும் இடம் பெற்று இருக்காது. பழைய ரூபாய் நோட்டுகளுடனேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகளும். புழக்கத்தில் விடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி ஏற்கனவே புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. தற்போது புதிய 100 ரூபாய் நோட்டு வர இருக்கிறது.
    Next Story
    ×