search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியபிரதேசத்தில் ரெயிலில் அடிபட்டு புலி இறப்பு
    X

    மத்தியபிரதேசத்தில் ரெயிலில் அடிபட்டு புலி இறப்பு

    மத்தியபிரதேசத்தில் ரெயில் நிலையத்துக்கு அருகே புலி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானது
    சாட்னா:

    மத்தியபிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மஜ்ஹவான் என்ற நகரில் அடர்ந்த காடு உள்ளது. இங்கு உள்ள விலங்குகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி ஊருக்கு வெளிப்புறத்தில் நடமாடுகின்றன.

    நேற்று முன்தினம் இரவு மஜ்ஹவான் ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள சித்தாரா என்ற இடத்தில் புலி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது புலி மீது வேகமாக வந்த ரெயில் மோதியது. புலி ரெயில் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே புலி இறந்து போனது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அது 4 வயதான ஆண் புலி என வனத்துறை அதிகாரிகள் கூறினர். 
    Next Story
    ×