என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானச் சேவைகள் 2-வது நாளாக பாதிப்பு
Byமாலை மலர்2 Dec 2016 11:50 PM GMT (Updated: 2 Dec 2016 11:50 PM GMT)
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானச் சேவைகள் 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. பின்னிரவில் தொடங்கும் பனிமூட்டம் காலை 10 மணிவரை விலகாமல் டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது.
காலை வேளைகளில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு பனிபெய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் உறைபனி பெய்ததால் ஓடுதளம் பகுதி இருண்டு காணப்பட்டது. ஓடுதளம் பகுதியில் தெளிவான காட்சி இல்லாததால் நேற்று(வெள்ளிக்கிழமை) 140-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 7 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்த 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதில் 7 மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமையும் 200-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 16 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. பின்னிரவில் தொடங்கும் பனிமூட்டம் காலை 10 மணிவரை விலகாமல் டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது.
காலை வேளைகளில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு பனிபெய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் உறைபனி பெய்ததால் ஓடுதளம் பகுதி இருண்டு காணப்பட்டது. ஓடுதளம் பகுதியில் தெளிவான காட்சி இல்லாததால் நேற்று(வெள்ளிக்கிழமை) 140-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 7 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்த 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதில் 7 மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமையும் 200-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 16 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X