என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நரேந்திர மோடி ஆப் மூலம் பல லட்சம் பேரின் தரவுகள் அம்பலமாகும் அபாயம்
Byமாலை மலர்2 Dec 2016 10:53 AM GMT (Updated: 2 Dec 2016 10:53 AM GMT)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார்.
மும்பை:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார். அதன் படி நரேந்திர மோடி ஆப்பை தங்களின் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்திருக்கும் பல லட்சம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் அளவு திறன் வாய்ந்ததாக இல்லை என 22 வயதான காத்ரி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆப் சரியான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என்ற தகவலை ஆப் வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்க முயன்ற காத்ரி, வடிவமைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலையில் ஆப் பிழையினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
நரேந்திர மோடி ஆப்பை ஹேக் செய்து இந்த பிழையை கண்டறிந்த காத்ரி, ஆப்பின் பிழையை மட்டும் எடுத்துக் காட்ட விரும்பியதாக தெரிவித்திருக்கிறார். பிழையானது பயனர்களின் தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறது என்றாலும், இது மிகப் பெரிய பிழை இல்லை என தெரிவித்துள்ளார்.
பயனர்களின் தகவல்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய இணைப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல்களை எளிமையாக பார்க்க முடியும் என காத்ரி எச்சரித்திருக்கிறார். தான் ஹேக் செய்த வழிமுறையை தெரிவித்தால் பயனர் தகவல்கள் ஹேக் செய்யப்படலாம் என்பதால் அதனை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார். அதன் படி நரேந்திர மோடி ஆப்பை தங்களின் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்திருக்கும் பல லட்சம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் அளவு திறன் வாய்ந்ததாக இல்லை என 22 வயதான காத்ரி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆப் சரியான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என்ற தகவலை ஆப் வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்க முயன்ற காத்ரி, வடிவமைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலையில் ஆப் பிழையினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
நரேந்திர மோடி ஆப்பை ஹேக் செய்து இந்த பிழையை கண்டறிந்த காத்ரி, ஆப்பின் பிழையை மட்டும் எடுத்துக் காட்ட விரும்பியதாக தெரிவித்திருக்கிறார். பிழையானது பயனர்களின் தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறது என்றாலும், இது மிகப் பெரிய பிழை இல்லை என தெரிவித்துள்ளார்.
பயனர்களின் தகவல்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய இணைப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல்களை எளிமையாக பார்க்க முடியும் என காத்ரி எச்சரித்திருக்கிறார். தான் ஹேக் செய்த வழிமுறையை தெரிவித்தால் பயனர் தகவல்கள் ஹேக் செய்யப்படலாம் என்பதால் அதனை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X