என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று குழந்தைகள் தினம்: ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அஞ்சலி
Byமாலை மலர்14 Nov 2016 3:46 AM GMT (Updated: 14 Nov 2016 3:47 AM GMT)
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் அவரது நினைவிடத்தில் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறு குழந்தைகள் மீது நேரு வைத்திருந்த பாசத்தை பிரதிபலிப்பதாக இந்தநாள் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில், இன்று நேருவின் 127-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியும் நேருவின் பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறு குழந்தைகள் மீது நேரு வைத்திருந்த பாசத்தை பிரதிபலிப்பதாக இந்தநாள் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில், இன்று நேருவின் 127-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியும் நேருவின் பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X