என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் பட்டாசுக் கடைகளில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் பலி
Byமாலை மலர்28 Oct 2016 3:29 PM GMT (Updated: 28 Oct 2016 3:29 PM GMT)
குஜராத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
வதோதரா:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு, புதுத்துணிகள், இனிப்புகள் வாங்குவதற்கு கடைவீதியில் குவிந்துள்ளனர். குறிப்பாக பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விற்பனை மையங்களில் பட்டாசு பண்டல்கள் மொத்தமாக கீழே விழுந்தாலோ அல்லது இறுக்கமாக கட்டி வைத்திருந்தாலோ அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. அவ்வகையில் குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டு பட்டாசு கடைகளில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ரஸ்தம்புரா கிராமத்தில் உள்ள இரண்டு பட்டாசுக் கடைகளில் இன்று மாலை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உடல்கருகி இறந்ததாகவும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு, புதுத்துணிகள், இனிப்புகள் வாங்குவதற்கு கடைவீதியில் குவிந்துள்ளனர். குறிப்பாக பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விற்பனை மையங்களில் பட்டாசு பண்டல்கள் மொத்தமாக கீழே விழுந்தாலோ அல்லது இறுக்கமாக கட்டி வைத்திருந்தாலோ அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. அவ்வகையில் குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டு பட்டாசு கடைகளில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ரஸ்தம்புரா கிராமத்தில் உள்ள இரண்டு பட்டாசுக் கடைகளில் இன்று மாலை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உடல்கருகி இறந்ததாகவும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X