என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவனந்தபுரம் அருகே பள்ளி சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்: தொழிலாளி கைது
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே மலையின் கீழ் வரதன்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் 11 வயது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து தனது வீட் டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நூருல் அகமது (வயது 31)என்ற வாலிபர் அந்த பள்ளி சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார்.
பிறகு அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் அந்த சிறுமியை விட்டு விட்டு நூருல் அகமது தப்பியோடி விட்டார்.
பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி நெடுமங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூருல் அகமதுவை தேடினார்கள்.
அப்போது அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு மது பாரில் மது அருந்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்