search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது
    X

    சத்தீஸ்கரில் ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையின்போது ஐந்து தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகன் மாவட்டத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மாவட்ட பாதுகாப்பு படையினர் அருகிலிருந்த காடுகளில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    தேடுதல் வேட்டையின்போது காடுகளுக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளைத் தாக்கினர்.

    இந்த துப்பாக்கி சண்டைக்குப்பின் தப்பியோட முயன்ற ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், நக்சல் சீருடை, மின்சார வயர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
    Next Story
    ×