search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ டெல்லி வந்தடைந்தார்
    X

    நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ டெல்லி வந்தடைந்தார்

    நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ டெல்லி வந்தடைந்தார், நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
    புதுடெல்லி:

    நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ நேற்று இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். மும்பை வரும் அவர் பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த இருந்தார். இந்த நிலையில், ஜான் கீ வந்த விமானம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

    அப்போது, விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  அதனைதொடர்ந்து நியூசிலாந்தில் இருந்து மாற்றுவிமானம் வரவழைக்கப்பட்டவுடன் ஜான் கீ ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று இந்தியாவுக்கு புறப்பட்டு செல்வார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஜான் கீ புதுடெல்லி வந்தடைந்தார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
    Next Story
    ×