search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒடிசா: பாதுகாப்பு படை என்கவுன்டரில் 23 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்

    ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 23 பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    புவனேஸ்வர்:

    ஆந்திர மாநில எல்லையோரமுள்ள ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள ஜந்த்ரி பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த பலர் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த வனப்பகுதியை இன்று அதிகாலை ஆந்திர மாநில சிறப்புப் படையினருடன் மல்காங்கிரி மாவட்ட போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசார் வந்திருப்பதை அறிந்துகொண்ட மாவோயிஸ்டுகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்டரில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராகுல் தேவ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×