என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம்: ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Oct 2016 10:56 AM GMT (Updated: 23 Oct 2016 10:56 AM GMT)
ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 8 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 8 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X