search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் புதிய மருத்துவமனை: ஜனாதிபதி திறந்து வைத்தார்
    X

    குஜராத்தில் புதிய மருத்துவமனை: ஜனாதிபதி திறந்து வைத்தார்

    குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் புதிய மருத்துவமனையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்தார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு விமானம் மூலம் தலைநகர் அகமதாபாத் வந்துசேர்ந்த ஜனாதிபதி, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று பிற்பகல் கார் மூலம் பருச் மாவட்டம், அங்க்லேஷ்வர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஹமத் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்றுமாலை காந்திநகரில் உள்ள பாப்பு குஜராத் ஞான கிராமத்துக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு நடைபெறும் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்று, விருதுகளை அளித்து, வாழ்த்துரை வழங்குகிறார்.

    இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
    Next Story
    ×