என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் புதிய மருத்துவமனை: ஜனாதிபதி திறந்து வைத்தார்
Byமாலை மலர்23 Oct 2016 10:12 AM GMT (Updated: 23 Oct 2016 10:12 AM GMT)
குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் புதிய மருத்துவமனையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு விமானம் மூலம் தலைநகர் அகமதாபாத் வந்துசேர்ந்த ஜனாதிபதி, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று பிற்பகல் கார் மூலம் பருச் மாவட்டம், அங்க்லேஷ்வர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஹமத் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றுமாலை காந்திநகரில் உள்ள பாப்பு குஜராத் ஞான கிராமத்துக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு நடைபெறும் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்று, விருதுகளை அளித்து, வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு விமானம் மூலம் தலைநகர் அகமதாபாத் வந்துசேர்ந்த ஜனாதிபதி, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று பிற்பகல் கார் மூலம் பருச் மாவட்டம், அங்க்லேஷ்வர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஹமத் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றுமாலை காந்திநகரில் உள்ள பாப்பு குஜராத் ஞான கிராமத்துக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு நடைபெறும் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்று, விருதுகளை அளித்து, வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X