search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- வங்கதேசம் எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
    X

    இந்தியா- வங்கதேசம் எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

    இந்தியா- வங்கதேசம் எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு ஆகியுள்ளது.
    மேகாலயா:

    இந்தியா- வங்கதேசம் எல்லையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வங்கதேச எல்லைப்பகுதியில் லேசான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி இந்த நில அதிர்வு நேற்று மாலை 6.35 மணியளவில் உணரப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் ரிக்ரட் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    வடகிழக்கு மாநில பகுதிகள் உயர் நில அதிர்ச்சி மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×