என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லெகிங்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்துவர தடை : திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி அதிரடி
Byமாலை மலர்21 Oct 2016 7:57 AM GMT (Updated: 21 Oct 2016 7:57 AM GMT)
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், குட்டை சட்டை மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்த்தியான, சுத்தமான உடைகளையே மாணவர்கள் அணிந்துவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பேன்ட், ஷர்ட், ஷூ அணிந்தும், மாணவியர் சுடிதார் அல்லது சேலை அணிந்தும் அடையாள அட்டையுடன் வெள்ளைநிற கோட்களை அணிந்தும் வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவைதவிர வேறுவகை உடை அணிந்து மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளையல், கொலுசு போன்ற ஓசை எழுப்பும் பொருட்களையும் பயன்படுத்த கூடாது என்று வெளியாகியுள்ள இந்த உத்தரவுக்கு மாணவ-மாணவியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவ-மாணவியர் லெகிங்ஸ், ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்த்தியான, சுத்தமான உடைகளையே மாணவர்கள் அணிந்துவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பேன்ட், ஷர்ட், ஷூ அணிந்தும், மாணவியர் சுடிதார் அல்லது சேலை அணிந்தும் அடையாள அட்டையுடன் வெள்ளைநிற கோட்களை அணிந்தும் வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவைதவிர வேறுவகை உடை அணிந்து மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளையல், கொலுசு போன்ற ஓசை எழுப்பும் பொருட்களையும் பயன்படுத்த கூடாது என்று வெளியாகியுள்ள இந்த உத்தரவுக்கு மாணவ-மாணவியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X