search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி
    X

    காஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீ மாநிலத்தின் ரியேசி பகுதியில் இருந்து ரஜோரி நகரை நோக்கி சுமார் 45 பயணிகளுடன் நேற்று ஒரு பேருந்து புறப்பட்டு சென்றது.

    ஜோதிபுரம் சாலை வழியாக சென்றபோது மாலை சுமார் 4 மணியளவில் அந்த பேருந்தின் ‘கியர்’ சரியாக இயங்காமல் போனது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி ஓடி, சாலையோரம் உள்ள சுமார் 300 அடி ஆழம்கொண்ட பள்ளத்தில் விழுந்து, கவிழ்ந்தது.

    இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புக்குழுவினர் நசுங்கி கிடந்த பேருந்துக்குள் சிக்கியிருந்த 35 பிரேதங்களை அகற்றினர். காயமடைந்தவர்கள் ரியேசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×