search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி நவாஸ் ஷெரிப்புடன் இனி பேசிப் பயனில்லை: சுப்பிரமணியசாமி
    X

    பிரதமர் மோடி நவாஸ் ஷெரிப்புடன் இனி பேசிப் பயனில்லை: சுப்பிரமணியசாமி

    பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நமது பிரதமர் மோடி இனி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை முன்னாள் மத்திய சட்டத்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பாராளுமன்ற மேல்சபை உறுப்பினரான சுப்பிரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கசப்புணர்வு தற்போது அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தற்போது நிலவிவரும் சூழலில் நவாஸ் ஷெரிப்புடன் பேசிப் பயனில்லை. ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியிடம் பாகிஸ்தானுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். அதனால் பயன் ஏற்படாது என்று நான் கூறி வந்துள்ளேன்’ என குறிப்பிட்டார்.
    Next Story
    ×