search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை
    X

    டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

    டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதியை சி.பி.ஐ. கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் மூத்த பெண் நீதிபதியாக இருப்பவர் ரச்னா திவாரி லகான்பால். இவர், வழக்கு ஒன்றின் விசாரணைக்குழு ஆணையராக வக்கீல் ஒருவரை நியமனம் செய்தார். இந்த நியமனத்திற்காக ரூ.20 லட்சம் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பெண் நீதிபதி, அதில் முன்பணமாக ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டார்.

    அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
    Next Story
    ×