search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தாக்குதல் எதிரொலி: கடல்வழி ஊடூருவலை தடுக்க குஜராத் எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு
    X

    ராணுவ தாக்குதல் எதிரொலி: கடல்வழி ஊடூருவலை தடுக்க குஜராத் எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு

    பாகிஸ்தான் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவத்தினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    நிலம் மற்றும் சர்வதேச கடல் பகுதிகளை குஜராத் மாநிலம் பாகிஸ்தான் நாட்டுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கடல் பகுதி வழியாக குஜராத் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம் என்பதால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது குறித்து குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் “பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் தங்க வைத்துள்ளோம். கடலோர காவற்படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கடற்பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மீனவர்களை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவற்படையினர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×