search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
    X

    கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

    கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

    இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பள்ளி, கல்வித்துறைக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்பு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறப்பட்டதாவது:-

    கேரளாவில் அரசு நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டம் மாநில பொது திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 35 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×