search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் மீது பெண் கற்பழிப்பு புகார்
    X

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் மீது பெண் கற்பழிப்பு புகார்

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சமாஜ்வாடி தலைவர் அசோக்பிரதான். இவர் மீது 24 வயது பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்.
    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சமாஜ்வாடி தலைவர் அசோக்பிரதான். இவர் மீது 24 வயது பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை அசோக்பிரதான் தான் ஏற்பாடு செய்து நடத்தி வைத்தார். இந்த நிலையில் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை அசோக்பிரதான் மற்றும் பங்கஜ் ஜிந்தால் ஆகியோர் கற்பழித்தனர். அவர்கள் மட்டுமல்ல எனது மாமனாரும் என்னை கற்பழித்துவிட்டார் என்று புகாரில் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அசோக்பிரதானிடம் கேட்டபோது, இது வேண்டுமென்ற கூறப்பட்ட குற்றச்சாட்டு. அந்த பெண் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடர போகிறேன் என்று கூறினார்.

    அசோக் பிரதான் ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியில் இருந்தவர். அந்த கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×