search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஐகோர்ட்டுகளில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்
    X

    சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஐகோர்ட்டுகளில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்

    ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஐகோர்ட்டுகளில் கூடுதலாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
    புதுடெல்லி:

    ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, சத்தீஷ்கார் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக சஞ்சய் அகர்வால், ராஜேந்திர சந்திரசிங் சமந்த், அனில் குமார் சுக்லா ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர்.

    ஜார்கண்ட் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக சிவானந்த் பதக், ராஜேஷ் சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.

    மேலும், மணிப்பூர் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் சாங்குப்சங் செர்டோ, கவுகாத்தி ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு சமீபத்தில் மாற்றலாகி வந்த ஜெய்ஸ்ரீ தாக்குர், அனுபிந்தர்சிங் கிரேவல் ஆகியோர் அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கே மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    Next Story
    ×