search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம்: பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்
    X

    காவிரி விவகாரம்: பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்

    காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, நாளை அமைச்சரவை மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×