search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 3 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி தற்கொலை
    X

    உத்தரபிரதேசத்தில் 3 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி தற்கொலை

    உத்தரபிரதேச மாநிலத்தில் 3 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் மாவட்டத்தில் உள்ளது இஷாநகர். இந்த ஊரைச்சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப், சுந்தர், மனோஜ் ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து அந்த சிறுமியை கற்பழித்தனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இது சம்மந்தமாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமி மிகவும் மனஉளைச்சலுடன் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    Next Story
    ×