என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்: சாலை விபத்தில் 8 பேர் பலி - 15 பேர் காயம்
Byமாலை மலர்26 Sep 2016 10:36 AM GMT (Updated: 26 Sep 2016 10:36 AM GMT)
குஜராத் மாநிலம், மார்பி மாவட்டத்தில் சாலையோரம் டீ குடித்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின்மீது லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள மட்டாநோ மட் கிராமத்தில் உள்ள பிரபல ஆலயத்துக்கு இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்களில் சிலர் யாத்திரையாக சென்றனர். வழியில் கட்ச் மற்றும் மோர்பி மாவட்டத்துக்கு இடையில் இருக்கும் எல்லைப்பகுதியான மலியா மியானா நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக இன்று காலை ஆட்டோவை நிறுத்தினர்.
ஆட்டோவுக்குள் அமர்ந்தவாறு அவர்கள் டீ குடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒருலாரி, அங்கு நின்று கொண்டிருந்த இரு ஆட்டோ ரிக்ஷாக்களின் பின்புறத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மூன்றுபேர் இறந்துப் போனதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்குபேர் பெண்கள் என தெரிவித்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இவ்விபத்தில் காயம் அடைந்த 15 பேர் மார்பி மற்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள மட்டாநோ மட் கிராமத்தில் உள்ள பிரபல ஆலயத்துக்கு இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்களில் சிலர் யாத்திரையாக சென்றனர். வழியில் கட்ச் மற்றும் மோர்பி மாவட்டத்துக்கு இடையில் இருக்கும் எல்லைப்பகுதியான மலியா மியானா நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக இன்று காலை ஆட்டோவை நிறுத்தினர்.
ஆட்டோவுக்குள் அமர்ந்தவாறு அவர்கள் டீ குடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒருலாரி, அங்கு நின்று கொண்டிருந்த இரு ஆட்டோ ரிக்ஷாக்களின் பின்புறத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மூன்றுபேர் இறந்துப் போனதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்குபேர் பெண்கள் என தெரிவித்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இவ்விபத்தில் காயம் அடைந்த 15 பேர் மார்பி மற்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X