என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி
Byமாலை மலர்23 Sep 2016 1:37 PM GMT (Updated: 23 Sep 2016 1:37 PM GMT)
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஐதாராபாத்:
வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் ஏராளமான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
அடுத்த 36 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கனமழைக்கு இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பேசி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் 2 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஐதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. மழையால் மோசமாக பாதிப்படைந்துள்ள சில பகுதிகளில் மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவியை அரசு கேட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் ஏராளமான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
அடுத்த 36 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கனமழைக்கு இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பேசி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் 2 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஐதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. மழையால் மோசமாக பாதிப்படைந்துள்ள சில பகுதிகளில் மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவியை அரசு கேட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X