search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் தீவிரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
    X

    சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் தீவிரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பொங்கா பேஜி கிராமத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக நேற்றிரவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் ஒழிப்பு சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் பொங்கா பேஜி கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியை இன்று காலை சுற்றிவளைத்தனர்.

    பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த  மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டதாகவும் அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மாவோயிஸ்ட் சீருடையில் இருந்த அவனது உடலருகே கைத்துப்பாக்கி மற்றும் நீண்ட துப்பாக்கி ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

    இறந்த தீவிரவாதி யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×