என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் தீவிரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Byமாலை மலர்24 Aug 2016 8:10 AM GMT (Updated: 24 Aug 2016 8:10 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பொங்கா பேஜி கிராமத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக நேற்றிரவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் ஒழிப்பு சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் பொங்கா பேஜி கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியை இன்று காலை சுற்றிவளைத்தனர்.
பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டதாகவும் அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் சீருடையில் இருந்த அவனது உடலருகே கைத்துப்பாக்கி மற்றும் நீண்ட துப்பாக்கி ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
இறந்த தீவிரவாதி யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X