search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட இந்தியாவுக்கு சிரியா அழைப்பு
    X

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட இந்தியாவுக்கு சிரியா அழைப்பு

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிடுவதற்கு இந்தியாவுக்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    சிரியா நாட்டின் தூதர் ரியாத் கமீல் அப்பாஸ் இன்று டெல்லியில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்து பேசினார்.

    20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, ஐ.எஸ் அமைப்பினர் மிகப்பெரிய ஏரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து அப்பாஸ் விளக்கினார்.

    இதுபற்றி உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், “ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பதற்கு மிகப்பெரும் நாடுகள் கூட்டுமுயற்சிக்கு முன்வர வேண்டும் என  சிரியா தூதர் அழைப்பு விடுத்தார். மேலும், இந்த தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் இந்தியா மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்” என்றார்.
    Next Story
    ×