என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் லாட்டரியில் 47 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததாகவும், இந்திய ரூபாய் மதிப்பிலேயே வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்து தருவதாகவும் மர்ம கும்பல் ஆசை வார்த்தைகூறி வலை விரித்துள்ளது.
இதனை நம்பிய கண்ணன், மனைவி பரிமளாவின் வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர்களின் ஸ்டேட் வங்கி கிளை கணக்கிற்கு 19-ந்தேதி 1.90 லட்ச ரூபாயும், அதன்பின் 2.35 லட்சம் ரூபாயும் பணபரிமாற்றம் செய்துள்ளார்.
மூன்று நாட்களாகியும் பரிமளாவின் வங்கி கணக்கில் பணம் வரவாகவில்லை. இதுகுறித்து பரிமளா முதுகுளத்தூர் ஸ்டேட் வங்கி கிளை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இது போன்ற பொய் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும், நீங்கள் பணம் செலுத்திய வங்கி கணக்கில் தற்போது முழுமையாக பணம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தான் 4.25 லட்சம் ரூபாயினை மர்ம கும்பல் அபகரித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில், பரிமளா புகார் அளித்துள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்