search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் பலி
    X

    ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் பலி

    சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
    திருவான்யூர் காமராஜபுரம் நோக்கி மாநகர அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    கிழக்குக் கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றது.



    அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×