என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சித்திரை திருவிழா கூட்டத்தில் மோதல்: விவசாயியை தாக்கிய எல்.ஐ.சி. ஏஜெண்ட் கைது
குன்னம்:
பெரம்பலூர் கைகளத்தூர் நெற்குனத்தை சேர்ந்தவர் வரதராஜன்.விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் நெற்குனத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வரதராஜனும், சுப்புராசும் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் சுப்புராஜ் அங்கு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை வரதராஜன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்புராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த இரும்பு கம்பியால் வரதராஜனை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் வரதராஜன் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கைகளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்