search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இணைப்பை வலியுறுத்தினார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இணைப்பை வலியுறுத்தினார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பை வலியுறுத்தினார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றுமையை வலியுறுத்திதான் பேசப்பட்டது. இரு அணிகள் இணைப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மூத்த அமைச்சர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் கிடையாது. அனைத்து பேச்சுவார்த்தையும் ஊடகங்களுக்கு தெரியாமல் நடக்காது. மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையை வலியுறுத்திதான் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தான் அனைத்து பேச்சுவார்த்தையும் நடக்கிறது. ஓ.பி.எஸ். அணியினரும் ஒற்றுமையைத் தான் வரவேற்கிறார்கள். 1½ கோடி தொண்டர்களும், மக்களும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையைத்தான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×