என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அருகே புதுப்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
திருச்சி:
திருச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மன்சூர் சேட். இவரது மனைவி யாஸ்மின்பானு (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. இந்நிலையில் 2 முறை கர்ப்பமான யாஸ்மினுக்கு கருகலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மாமியார், மாமனார் அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த யாஸ்மின்பானு எடமலைப் பட்டிபுதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யாஸ்மின்பானு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்