என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்26 April 2017 11:32 AM GMT (Updated: 26 April 2017 11:32 AM GMT)
தஞ்சையில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
நேபாள நாட்டில் உள்ள முத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாஸ்வான் (வயது35). இவர் தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே உள்ள ஹோட்டலில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவதன்று இரவு மேரீஸ்கார்னர் பகுதியில் ராம்பாஸ்வான் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ்நிலையத்திற்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம்பாஸ்வான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X