என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் அருகே கார் விபத்து: தொழில் அதிபர் மனைவி பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் உள்ள ஓ.ஜெ.எம். தெருவைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை. இவர் சென்னையில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி ஆயிஷத் அலி பாத்திமா (57). இவர்கள் இருவரும் கீழக்கரையில் நடைபெற இருந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த முருகபெருமாள் காரை ஓட்டினார்.
இன்று காலை கீழக்கரை தீயனூர் ஓட்டமடகாளி கோவில் அருகே கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது மதுரை காருக்கு பின்னால் வந்த வேனும், விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஆயிஷத் அலி பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அல்லா பிச்சை மற்றும் கார் டிரைவர் முருகபெருமாள், மற்றொரு காரில் வந்த ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனை டாக்டர் மலை அரசு, பாலசுப்பிரமணி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாத புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்