search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க அலுவலகத்தில் தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்
    X

    சசிகலா பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க அலுவலகத்தில் தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் சசிகலா பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. அப்போது அங்கு நின்றிருந்த தொண்டர் ஒருவர் பேனர் அகற்றுவதை எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினார்.

    சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு உயிரையும் கொடுப்பேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கெங்கமங்கலத்தை சேர்ந்த சதிம்மராயப்பா என்பது தெரியவந்தது. மேலும் அவர் கடந்த திங்கட்கிழமை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்த போது அவரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×