search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
    X

    செம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பகுதியில் மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே செம்பட்டியில் 2 டாஸ்மாக் கடை இருந்தது. இந்த கடைகள் நெடுஞ்சாலை ஓரத்தில் இருப்பதாக கூறி, நீதிமன்ற உத்திரவின்பேரில் அகற்றப்பட்டது. இப்போது, ஒரு கடை பழனி ரோடு, கோழிப்பண்ணை அருகே தனியார் தோட்டத்தில் வைத்துள்ளனர். மற்றொரு கடையை செம்பட்டி அடுத்த புதுக்கோடாங்கிபட்டி அருகே அம்பாத்துரை மெயின் ரோட்டில் வைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த இடத்தில் மது கடை அமைத்தால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். திண்டுக்கல், அம்பாத்துரை மெயின் ரோட்டில் அமைப்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வழியாக கூலி வேலைக்கு பெண்கள் செல்வதாலும், பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருவதால் மது கடை வைக்ககூடாது என கிராம பொதுமக்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    Next Story
    ×