search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

    வேதாரண்யம் அருகே முன்விரோத பிரச்சினையில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரன் மகன் சித்திரவேல் (வயது 42), மாரியப்பன் மகன் வடிவேல் (வயது 42). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் வேலிப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று அந்த ஊரிலுள்ள சீதளா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு சித்திரவேல் மற்றும் வடிவேல் வீட்டிற்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து தங்கியுள்ளனர்.

    அப்போது முன்விரோத வேலிப் பிரச்சனை காரணமாக ஒருவருக்கொருவர் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கம்பு கட்டை அரிவாளால் தாக்கி கொண்டு தங்களது வீட்டிலுள்ள பொருட்களையும் ஒருவருக்கொருவர் அடித்து சேதப்படுத்திக் கொண்டனர்.

    இதில் இருதரப்பைச் சேர்ந்த தேத்தாகுடி வடக்கு கிராமம் வேடன் நகர் சுப்பிரமணியன் மகன் விஜயன் (30) என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வடிவழகன் (27) ஆகிய இருவரும் வெட்டுக் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விஜயன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கருப்பம் புலத்தை சேர்ந்த வீரன் மகன் சித்திரவேல், அகஸ்தியன் பள்ளி பூவன்தோப்பை சேர்ந்த வேதையன் மகன் பழனிச்சாமி, கருப்பம்புலத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சிவா ஆகியோர் மீதும், சித்திரவேல் கொடுத்த புகாரின் பேரில் கருப்பம்புலத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வடிவேல், தேத்தாகுடி வடக்கு சுப்பிரமணியன் மகன் விஜயன் மற்றும் தேத்தாகுடி வடக்கு பக்கிரிசாமி மகன் வடிவழகன் ஆகியோர் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    முன்விரோத பிரச்சினையில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×