என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பலி
Byமாலை மலர்24 April 2017 1:44 PM GMT (Updated: 24 April 2017 1:44 PM GMT)
திருச்சியில் ஓடும் பஸ்சில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பஸ் டிரைவர், கண்டக்டர் பரிசோதித்து பார்த்த போது இறந்தது தெரியவந்தது.
திருச்சி:
திருப்பூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை திருச்சி வந்ததும் , திருச்சியில் இறங்கக்கூடிய பயணிகள் இறங்கி சென்றனர். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். அவரை டிரைவர்- கண்டக்டர் மீட்டு கீழே இறக்கி வைத்தனர்.
பின்னர் அவரை பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்.
மேலும் இறந்தவர் குறித்து விசாரிக்கும் போது அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ரெங்கசாமி (வயது35) என்பது தெரியவந்தது. அவரது சட்டை பையில் அல்சருக்கு சாப்பிடக்கூடிய மருந்து இருந்தது. இதனால் உடல் நிலை பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பஸ்சில் வரும் போதே இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை திருச்சி வந்ததும் , திருச்சியில் இறங்கக்கூடிய பயணிகள் இறங்கி சென்றனர். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். அவரை டிரைவர்- கண்டக்டர் மீட்டு கீழே இறக்கி வைத்தனர்.
பின்னர் அவரை பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்.
மேலும் இறந்தவர் குறித்து விசாரிக்கும் போது அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ரெங்கசாமி (வயது35) என்பது தெரியவந்தது. அவரது சட்டை பையில் அல்சருக்கு சாப்பிடக்கூடிய மருந்து இருந்தது. இதனால் உடல் நிலை பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பஸ்சில் வரும் போதே இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X