search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் கொள்ளை

    திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் துணிகர கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கோமதி. இவர் நேற்று இரவு வீட்டு கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.

    காலையில் கீழே இறங்கி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது தெரிந்தது.

    ராம்சிங் என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரும் நேற்று வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ. 6 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×