என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடை அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரசார் துணை நிற்கவேண்டும்: திருநாவுக்கரசர்
Byமாலை மலர்21 April 2017 7:22 AM GMT (Updated: 21 April 2017 7:22 AM GMT)
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ந்தேதி நடைபெறும் கடைஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரசார் துணை நிற்க வேண்டும் என திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் அமைந்த பிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக தலைநகர் டெல்லியில் நூதனமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால் போராடுகிற விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பதற்குக் கூட வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடிக்கு மனமில்லாமல் போனது மிகுந்த வேதனையைத் தருகிறது. இது கண்டனத்திற்குரியது.
மத்திய, மாநில அரசுகளால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். வரலாறு காணாத வறட்சி கொடுமையால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உட்கட்சி பூசலாலும், பதவி போட்டியினாலும் செயலிழந்த நிலையில் அ.தி.மு.க. அரசு முடங்கிக் கிடக்கிறது.
வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாகவும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் வருகிற ஏப்ரல் 25-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவதென்று தி.மு.க. - காங்கிரஸ் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கான காரணங்களை மக்களுக்கு விளக்கிடும் வகையில் சென்னையில் ஏப்ரல் 22-ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பெருமளவில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ஏப்ரல் 25-ம் தேதி நடக்கிற மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து வகைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் போராடுகிற விவசாயிகளின் பின்னால் தமிழகமே அணிதிரண்டு நிற்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவோம். இப்போராட்டம் மக்கள் போராட்டமாய் மலர்ந்து வெல்லட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் அமைந்த பிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக தலைநகர் டெல்லியில் நூதனமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால் போராடுகிற விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பதற்குக் கூட வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடிக்கு மனமில்லாமல் போனது மிகுந்த வேதனையைத் தருகிறது. இது கண்டனத்திற்குரியது.
மத்திய, மாநில அரசுகளால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். வரலாறு காணாத வறட்சி கொடுமையால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உட்கட்சி பூசலாலும், பதவி போட்டியினாலும் செயலிழந்த நிலையில் அ.தி.மு.க. அரசு முடங்கிக் கிடக்கிறது.
வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாகவும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் வருகிற ஏப்ரல் 25-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவதென்று தி.மு.க. - காங்கிரஸ் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கான காரணங்களை மக்களுக்கு விளக்கிடும் வகையில் சென்னையில் ஏப்ரல் 22-ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பெருமளவில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ஏப்ரல் 25-ம் தேதி நடக்கிற மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து வகைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் போராடுகிற விவசாயிகளின் பின்னால் தமிழகமே அணிதிரண்டு நிற்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவோம். இப்போராட்டம் மக்கள் போராட்டமாய் மலர்ந்து வெல்லட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X