search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் விடிய,விடிய பலத்த மழை
    X

    ஊட்டியில் விடிய,விடிய பலத்த மழை

    ஊட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லம் அருகில் ஒரு பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இந்த ஆண்டும் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. பெரும்பாலான நாட்களில் சமவெளிக்கு ஈடாக வெயில் வறுத்தெடுத்து வந்தது. இதனால் ஊட்டி நகரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறிது நேரம் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது. இந்த மழை நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    இந்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஊட்டி படகு இல்லம் அருகில் ஒரு பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. நேற்று அதிகாலை நேரத்தில் இந்த மரம் விழுந்ததால் எவ்வித விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் படகு இல்ல ஊழியர்கள் மின்சார வாள் கொண்டு மரத்தை வெட்டி அகற்றினர்.

    நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்:–

    குன்னூர் –9.2 மி.மீ.

    கூடலூர் – 3 மி.மீ.

    குந்தா– 4 மி.மீ.

    கேத்தி– 11 மி.மீ.

    கோத்தகிரி– 8 மி.மீ.

    நடுவட்டம்– 18 மி.மீ.

    ஊட்டி– 17.3 மி.மீ.

    கல்லட்டி– 12 மி.மீ.

    கிளன்மார்க்கன்– 27 மி.மீ.

    அப்பர்பவானி–1 மி.மீ.

    எமரால்டு– 3 மி.மீ.

    அவலாஞ்சி– 10 மி.மீ.

    கெத்தை– 1மி.மீ.

    கோடநாடு–42 மி.மீ.

    தேவாலா– 2 மி.மீ.

    பர்லியார்– 5 மி.மீ.
    Next Story
    ×